இலங்கைசெய்திகள்

மாணவர் மதிய உணவுத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

புங்குடுதீவு மகா வித்தியாலய பழைய மாணவர்களின் நிதி அனுசரணையில் மாணவர்களுக்கான ”மதிய உணவுத் திட்டம்” ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இச்செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பழைய மாணவர் மாகோ சின்னத்தம்பி கனகலிங்கம்

(முன்னாள் விரிவுரையாளர் – பேராதனை பல்கலைக்கழகம் ) அவர்கள் முன்னோடியாக இருந்து இச்செயற்றிட்டத்தை செயற்படுததியுள்ளார்.

இந்நிகழ்வில் ஓய்வுநிலை பேராசிரியர் கா. குகபாலன் , வேலணை கோட்ட கல்வி அதிகாரி சசிதரன், வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் .

அத்துடன், வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் மாணவர்களுக்கான நூல்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Related Articles

Leave a Reply

Back to top button