இலங்கைசெய்திகள்

பட்டப்பகலில் துவிச்சக்கரவண்டியை ஆட்டையப்போட்ட திருட்டுக்கும்பல்

ஊரெழுப்பகுதியில் வீடொன்றில் இருந்த துவிச்சக்கரவண்டி பட்டப்பகலில் திருடர்களால் நேற்று (14) களவாடப்பட்டுள்ளது.

ஊரெழு மேற்குப்பகுதியில் கூலித்தொழிலாளியான ஒருவரின் துவிச்சக்கரவண்டி அவருடைய வீட்டில் இருந்து களவாடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்டவரினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் பொலிஸரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன் பின்னணியில், பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டவரின் வீட்டின் மீது கல்வீச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button