![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/IMG-66252fc3c74b7c3ec3f6f16519121d24-V.jpg?resize=708%2C398&ssl=1)
எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கொள்கலன்களுடன் மாட்டுவண்டியில் சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளது. கரைச்சி பிரதேசபை உறுப்பினர் ஜீவராசா அவர்களே இவ்வாறு சென்றுள்ளார்.
கரைச்சி பிரதேச சபை அமர்வு இன்று இடம் பெறும் நிலையில் தனது வாகனத்திற்கு எரிபொருள் இல்லாமையால் இவ்வாறு எரிபொருளை பெற்றுக்கொள்ள மாட்டுவண்டியில் பயணித்ததாக அவர் மக்களிடம் கருத்துத் தெரிவித்தார்.