![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/vikatan_2019-05_972cfb87-9f94-42bf-93b5-2efc8ff05dc0_105828_thumb.jpg?resize=600%2C338&ssl=1)
மண்ணெண்ணெய் அடுப்பினுள் மண்ணெண்ணெயை விட்ட போது அடுப்பு தீப்பற்றி எரிந்ததில் இளம் குடும்பப்பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 30 வயதுடைய ஆ.தர்ஷிகா என்பவரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.