இலங்கைசெய்திகள்

யாழில் எரிவாயு சிலிண்டர்கள் குடும்ப அட்டை பதிவிற்கே வழங்கப்படும்

யாழ்.மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர்கள் குடும்பஅட்டை பதிவிற்க்கே நிலைமை சீராகும்வரை வழங்கப்படுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலே இம்முடிவு எடுக்கப்பட்டதாக அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதன்படி, ஒவ்வொரு கிராம சேவையாளர்கள் ஊடாக எரிவாயு சிலிண்டர் தேவைப்படுவோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அது பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். பிரதேச செயலாளர்கள் அவ்விபரங்களை மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதன்படி, மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கப்பெறும் எரிவாயு சிலிண்டர்கள் பிரதேச செயலாளர்களுக்கு பங்கீட்டு வழங்கப்படும்.
பிரதேசசெயலாளர்கள் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள முகவர்கள் ஊடாக வழங்கிவைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button