இலங்கைசமீபத்திய செய்திகள்
நுணாவிலில் பயங்கர விபத்து மோட்டார் சைக்கிளை தட்டித்தூக்கிய பின்னால் வந்த வான்
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220523-WA0009-768x1024.jpg?resize=708%2C944&ssl=1)
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் பகுதியில் சற்று நேரத்திற்கு முனனர் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நுணாவில் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பக்கம் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை, அதே திசையில் பயணித்த மினிவான் பின்பக்கமாக மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும், இன்னொருவரும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : காந்
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220523-WA0011-768x1024.jpg?resize=708%2C944&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220523-WA0010-768x1024.jpg?resize=708%2C944&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220523-WA0013-768x1024.jpg?resize=708%2C944&ssl=1)