இலங்கைசெய்திகள்

விசுவமடுவில் இருந்து காலிமுகத்திடலுக்கு துவிச்சக்கரவண்டியில் சென்று அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒருவர்

கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும் முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இருந்து கொழும்பு காலிமுகத்திடல் வரை ஒருவர் துவிச்சக்கரவண்டியில் செல்லும் எதிர்ப்பு போராட்டத்தை ஒருவர் ஆரம்பித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

32 வயதுடைய இராசரத்தினம் ஜனகவர்மன் என்பவரே மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button