![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/Protest-2.jpg?resize=509%2C379&ssl=1)
கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிராக நாளை தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படவுள்ள ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் இதற்கான ஆதரவை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. அத்துடன், வடமாகாணத்தில் பணியாற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் நாளை சுகயீன விடுமுறையை அறிவித்து ஆதரவு வழங்குமாறு குறித்த சங்கம் அறிவித்துள்ளது.