இலங்கைசெய்திகள்

அரிசிக்காக வரிசையில் நின்றவர்களுக்கு அரிசி வாங்கி கொடுத்த வெளிநாட்டவர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் அனைத்துப்பகுதிகளிலும் ஏதோ ஒரு வரிசையை ஒவ்வொரு நாட்களிலும் அவதானிக்க முடிகின்றது.

அவ்வகையில், சதொச விற்பனை நிலையங்களில் அரிசி ஒரு கிலோகிராம் 110 ரூபாவிறகு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், அதனைப்பெற்றுக் கொள்வதற்கு வெலிகம பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்தின் அதிகளவான மக்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளனர்.

இந்நேரம், அவ்வழியால் சென்ற இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் வரிசையில் நின்ற 129 பேருக்கு தலா 5 கிலோகிராம் அரிசி வீதம் வாங்கி கொடுத்துள்ளார். அத்துடன் மருந்து வகைகளுக்கு காத்திருந்தவர்களுக்கு தலா 2000 ரூபா பணமும் வழங்கி வைத்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button