இலங்கைசெய்திகள்

டீசலை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்ற இருவர் மரணம்

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தங்கொடுவ மற்றும் வென்னபுவ ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்ற இருவர் உயிரிழந்துள்ளனர்.

டீசலைப் பெற்றுக்கொள்வதற்காக தங்கொடுவ பகுதியில் இரண்டு நாட்களாக வரிசையில் காத்திருந்த 47 வயதுடைய ஒருவர் கீழே வீழ்ந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார்.

அத்துடன், வென்னபுவ எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் காத்திருந்த 51 வயதுடைய மற்றொருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button