கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தகாலத்தில் அழிவடைந்த கிளநொச்சி பொது நூலகம் புதிதாக கரைச்சி பிரதேச சபையினரால் நிர்மாணிக்கப்படவுள்ளது.
அதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று (18) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய பதில் துணை தூதுவர் மற்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலை அதிபர்கள், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/IMG-20220118-WA0040-1024x576.jpg?resize=708%2C398&ssl=1)