இலங்கைசெய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை தடைசெய்யக்கோரும் கையெழுத்துப் போராட்டம் சங்கானையிலும் முன்னெடுப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு கோரி இலங்கை தமிழரசுகட்சி வாலிபர் முண்ணனியால் நாடுபூராகவும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அண்மைய நாட்களாக யாழ்.மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் இப்போராட்டம் தொடர்ச்சியாக மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.

அவ்வகையில் இன்று (25) பயங்கரவாத தடைச்சட்டத்தை தடைசெய்யக்கோரும் கையெழுத்துப் போராட்டமானது சங்கானை பேருந்து நிலையற்கு முன்பாக இடம்பெற்றது.

இப்போராட்டத்தில், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button