இலங்கைசமீபத்திய செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண்ணை வன்புணர்ந்த காமாப் பிசாசுக்கு இதுவரை நடவடிக்கை மேற்க்கொள்ளவில்லை என மக்கள் விசனம்

வடமராட்சிப் பகுதியில் 66 வயதுடைய மனநலம் குன்றிய வயோதிபபெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றுள்ள போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்க்கொள்ளவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் இருந்து விடுதலையான குறித்த நபர் (வயது – 40) சம்பவ தினத்தன்று குறித்த மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று வீட்டு வாசலில் வைத்து வன்புணர்வு செய்துள்ளார்.

பொலிஸாருக்கு சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்ட நிலையிலும் பொலிஸார் இதுவரை நடவடிக்கைகள் மேற்க்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button