இலங்கைசமீபத்திய செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண்ணை வன்புணர்ந்த காமாப் பிசாசுக்கு இதுவரை நடவடிக்கை மேற்க்கொள்ளவில்லை என மக்கள் விசனம்
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/10/download.jpeg?resize=300%2C168&ssl=1)
வடமராட்சிப் பகுதியில் 66 வயதுடைய மனநலம் குன்றிய வயோதிபபெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றுள்ள போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்க்கொள்ளவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் இருந்து விடுதலையான குறித்த நபர் (வயது – 40) சம்பவ தினத்தன்று குறித்த மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று வீட்டு வாசலில் வைத்து வன்புணர்வு செய்துள்ளார்.
பொலிஸாருக்கு சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்ட நிலையிலும் பொலிஸார் இதுவரை நடவடிக்கைகள் மேற்க்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.