![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/download-70.jpeg?resize=275%2C183&ssl=1)
குருநாகலில் எரிபொருள் ஏற்றிச்சென்ற பெளசர் கவிழந்து விபத்துக்குள்ளாகிய சம்பவம் இன்று (27) இடம்பெற்றுள்ளது.
கொலன்னாவையில் இருந்து திருகோணமலை கிண்ணியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளை கொண்டு சென்ற பெளசரே விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பெளசரில் 13 200 லீற்றர் எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இதில் பாரியளவு எரிபொருள் வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.