இலங்கைசெய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும் – அமைச்சர்

எதிர்வரும் மூன்று நாட்ளுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறும், தேவையில்லாமால் அதிகளவான மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திரள்வதை கைவிடுமாறும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார்.

டீசல் கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது. அடுத்தவாரமளவில் மேலும் 3 கப்பல்களில் எரிபொருட்கள் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button