இலங்கைசமீபத்திய செய்திகள்

மட்டக்களப்பில் சோகம் கடலில் குளித்த 3 இளைஞர்கள் உயிரிழப்பு

மட்டக்களப்பு வாகரையின் கதிரவெளி கடற்கரையில் நீராடிய மூன்று இளைஞர்கள் கடலலையில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (12) மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில், காளிகோவில் கதிரவெளியைச் சேர்ந்த ஜீவனாந்தம் விமல்ராஜ் (வயது 22), வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த புலேந்திரன் அனுஷ்காந் (வயது 23), புதூர் கதிரவெளியைச் சேர்ந்த தங்கவேல் சஜிதன் (வயது 26) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கதிரவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button