Uncategorized

நாடுபூராகவும் அமோக ஆதரவுடன் தொடரும் கையெழுத்துப்போராட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக தடைசெய்யக்கோரி இலங்கை தமிழரசுகட்சி வாலிபர் முன்னணியினரால் நாடு பூராகவும் கையெழுத்துப் போராட்டம் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.

அவ்வகையில் நேற்று (18) காலி மற்றும் மாத்தறையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் மூவின மக்களும் அணிதிரண்டு தத்தமது கையெழுத்துக்களைப் பதிவிட்டனர்.

இவ் கையெழுத்துப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன் எதிர்க்கட்சிக் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், முற்போக்குக் கட்சிகளின் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் மூவின மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button