இலங்கைசெய்திகள்

யாழில் அதிகாலையில் கோரவிபத்து ஒருவர் பலி மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்தியில் இன்று (02) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை மகேந்திரா பட்டாரக வாகனம் மோதித்தள்ளியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மகேந்திரா வாகனத்தில் வந்த இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button