இலங்கைசெய்திகள்

கோழிப்பண்ணையைக்கூட நடத்த தற்போதைய அரசாங்கத்திற்கு திராணி இல்லை அனுரகுமார திஸாநாயக்க விளாசல்

தற்போதுள்ள அரசாங்கத்திற்கு கோழிப்பண்ணையைக் கூட ஒழுங்காக நடத்த திராணி இல்லை என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட மாநாட்டில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதலுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க இந்த அரசாங்கம் தவறிவிட்டது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 855 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், 6 வருடங்கள் கடந்தால் அது மறைக்கப்பட்டுவிடும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button