இலங்கைசமீபத்திய செய்திகள்

நாடுபூராகவும் 3 நாட்கள் பாடசாலை – வடமாகணத்தில் 5 நாட்களும் பாடசாலை

வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகள் நாளை முதல் ஐந்து தினங்களும் இயங்கும் என வடமாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் தூர இடங்களில் இருந்து பாடசாலைகளுக்கு வருகை தரும் ஆசிரியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் சமூகமளிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சனை காரணமாக நாடு பூராகவும் உள்ள அரச, தனியார் பாடசாலைகள் மூன்று தினங்களே இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், வடமாகாணத்தில் மாத்திரம் இம் நடைமுறை நாளைமுதல் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button