இலங்கை

வடமராட்சியில் பதற்றம் மருதங்கேணி பிரதேச செயலகம் முற்றுகை

வடமராட்சி வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் சடலமாக கரையொதுங்கியுள்ள நிலையில் வடமராட்சிப் பகுதியில் பதற்றமான நிலை தோன்றியுள்ளது.

இந்திய மீனவர்களாலேயே வத்திராயன் மீனவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளதாக வடமராட்சி மக்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் கடும் கோபத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நீதி வேண்டியும், இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்தும் இன்று (01) காலை 7.00 மணியிலிருந்து மருதங்கேணி பிரதேச செயலகம் மக்களால் முடக்கப்பட்டு போராட்டம் இடம் பெற்று வருகின்றது.

இப்போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button