இலங்கைசமீபத்திய செய்திகள்

ஊரெழுவில் தொடரும் சோகம் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழுப் பகுதியில் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய சிவலோகேஸ்வரன் மதுரகன் என்பவரே தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

ஊரெழுமேற்கு கணேசா வித்தியசாலைக்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 2.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாலையில், வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட நிலையில், உறவினர்களால் கீழே அறுத்துவீழ்த்தப்பட்டுள்ளது. எனினும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

இப்பிரதேசத்தில் கடந்த ஒருமாதத்திற்கு முன்னரும் ஒரு இளைஞன் தூக்கில் தொங்கி உயிர் மாய்த்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button