இலங்கைசமீபத்திய செய்திகள்
அத்துக்கோரள எம்.பியின் கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/22-62803bb77e28f.jpeg?resize=600%2C400&ssl=1)
நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது கொலைசெய்யப்பட்ட பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கம்பஹாவைச் சேர்ந்த 32 வயதுடையவரே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.