இலங்கைசெய்திகள்

பேருந்தில் இருந்து கீழ் இறங்கிய பெண் பேருந்தின் சில்லின் நசியுண்டு பலி

பஸ்ஸில் இருந்து கீழே இறங்கிய பெண் தவறுதலாக கால் தடுமாறி கீழே வீழ்ந்ததில் பஸ்ஸின் சில்லு ஏறி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நாவற்குழியில் இவ் பரிதாபச்சம்பவம் இன்று (30) மதியம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்திற்குச் சொந்தமான பேருந்தில் இருந்து குறித்த பெண் நாவற்குழியில் கீழே இறங்கியுள்ளார்.

கீழே இறங்கிய போது குறித்தபெண் மண்பிட்டியில் கால் வைத்தபோது கால் தடுமாறி வீதியின் பக்கமாக வீழ்ந்துள்ளார்.

இதனை அவதானிக்காத குறித்த பேருந்து புறப்பட்டுச் சென்ற வேளையிலேயே பேருந்தின் பின் சில்லு குறித்த பெண்ணின் தலையில் ஏறியுள்ளது.

உடனடியாகவே குறித்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குச் கொண்டு சென்றபோதும் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Articles

Leave a Reply

Back to top button