![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/d8c697a0-b0403898-thriposha_850x460_acf_cropped.jpg?resize=708%2C383&ssl=1)
நாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்ற திரிபோஷா தற்போது கையிருப்பில் இல்லை என சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சொய்சா தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் முதல் திரிபோஷா மா இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். சோள உற்பத்தி குறைந்தமையே இதற்குரிய பிரதான காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷாவைத் தொடர்ந்து வழங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் உதவி கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.