இலங்கைசெய்திகள்

இராணுவம் பொலிஸாருக்கு எதிராக காணொளி வெளியிட்டவர் கைது

இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிட்ட ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கொலைசெய்யப்பட வேண்டும் என்ற காணொளியை வெளியிட்ட 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button