இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

“அரசாங்கத்தை விரட்டுவோம் முறமையை மாற்றுவோம்” என்னும் தொனிப்பொருளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை பிரயோகித்தமையால் நாடாளுமன்றப் பகுதியில் நேற்று (05) குழப்பநிலை ஏற்பட்டது.

ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பித்த மாணவர்கள் பேரணி நாடாளுமன்றப் பகுதியை அண்மித்த வேளையில், பொலிஸரால் வீதித்தடைகள் போடப்பட்டன.

இதனால் வீதித்தடைகளை அகற்ற மாணவர்கள் முற்பட்டபோதே கண்ணீர்புகை பிரயோகம் பொலிஸரால் மேற்க்கொள்ளப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button