![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/babyboy_1.jpg?resize=708%2C398&ssl=1)
திடீர் காய்ச்சலுக்கு உள்ளான 11 மாத ஆண்குழந்தை ஒன்று நேற்று (04) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் தவசிகுளத்தைச்சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற ஆண்குழந்தையே உயிரிழந்துள்ளது.
நேற்றுமுன்தினம் காய்ச்சலுக்கு உள்ளான குழந்தை மிருசுவில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டபோதே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.