இலங்கைசெய்திகள்

சுமந்திரன் எம்.பியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து உதவிகள் வழங்கி வைப்பு

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து வலி. மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கும் சனசமூக நிலையங்களுக்கும் இதர பொது அமைப்புகளுக்கும் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவ் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (22) சங்கானை பிரதேச செயலக பொது மண்டபத்தில், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கந்தையா இலங்கேஸ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

இதில் விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கதிரைகள், இதர உபகரணங்கள் குடிநீர் தாங்கி அமைப்பதற்கான பண உதவி மற்றும் மலசலகூடம் அமைப்பதற்காக பண உதவி என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நரேந்திரன், பிரதேச சபை உறுப்பினர்கள், ஜடாயு தன்னார்வ அமைப்பினர் மற்றும் பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button