இலங்கைசெய்திகள்

14 வயது இரண்டு சிறுமிகள் முகப்புத்தக காதலால் வாழ்வையிழந்து நடுத்தெருவில் நின்றவேளை பொலிஸரால் மீட்கப்பட்டனர்

பெற்றோருக்கு டிமிக்கிகாட்டி, யார் என்று தெரியாதவர்களுடன் முகப்புத்தகம் (Fb) மூலம் அறிமுகமாகி தன்னுடைய வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி, தன்னுடைய நண்பியின் வாழ்வையும் அழித்து நடுத்தெருவில் நின்ற வேளையில் இரண்டு சிறுமிகள் பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பதிவாகியுள்ளது. 14 வயது சிறுமி ஒருவர் முகப்புத்தகம் மூலம் முகம் தெரியாத பலருடன் நட்புறவுகொண்டு, இறுதியில் மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் காதலில் வயப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முகப்புத்தக காதலன் சிறுமியை எவ்வாறோ தன்னுடைய ஆசை வார்த்தைகளால் மயக்கி செங்கலடிக்கு வருமாறு அழைத்துள்ளான். சிறுமியும் செங்கலடிக்குச் சென்றாள்.

மட்டக்களப்பு எந்ததிசையில் இருக்கின்றது என்பதையே அறியாத சிறுமி தன்னுடன் துணைக்கு தனது நண்பியான 14 வயது சிறுமி ஒருவரையும் அழைத்தச்சென்றுள்ளார்.

காதலனின் வழிகாட்டுதலின் பிரகாரம் சிறுமிகள் இருவரும் மட்டக்களப்பு பஸ்ஸில் ஏறி செங்கலடியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் சிறுமியின் முகப்புத்தக காதலனான 17 வயது சிறுவனும் அவனுடைய நண்பர்கள் உள்ளடங்கலாக நான்குபேர் இரு சிறுமிகளையும் அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், 14 வயது சிறுமியின் காதலனான 17 வயது சிறுவன் தன்னுடைய காதலியை ரூம் ஒனறினுள் அழைத்துச்சென்று காதலியின் விருப்பதுடன் இருவரும் அந்தரங்கத்தில் ஈடுபட்டுள்ளனர். (இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் துஷ்பிரயோகம் ஏன்றே உள்ளடங்கும்)

ஒருநாள் மட்டக்களப்பில் தங்க வைக்கப்பட்ட சிறுமிகள் அடுத்தநாள் யாழ்ப்பாணம் செல்லும் பஸ்ஸில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர். தாங்கள் இறங்க வேண்டிய இடம்தெரியாத சிறுமிகள் யாழ்.மத்திய பேருந்துநிலையத்தில் இறங்கியுள்ளனர்.

இராப்பொழுதில் யாழ்.மாநகரில் சுற்றித்திரிந்த இருசிறுமிகளையும் அவதானித்த யாழ்.மாநகர பான்சிகடை உரிமையாளர் ஒருவரும், அவருடைய நண்பரும் இரண்டு சிறுமிகளையும் ஏதோவகையில் கதைத்து அவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.

பான்சிகடைக்கார உரிமையாளராலும், நண்பராலும் 14 வயது காதலியுடன் துணைக்குச்சென்ற 14 வயதுசிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அடுத்தநாள் மாலையில் சிறுமிகளை பஸ்ஸில் ஏற்றி புதுக்குடியிருப்புக்கு அனுப்பியுள்ளனர். சிறுமிகள் இருவரும் இரவு புதுக்குடியிருப்பில் இறங்கி நின்றபோதே பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துரித விசாரணையிலேயே மேற்குறித்த தகவல்கள் பொலிஸரால் பெறப்பட்டதுடன், சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் 17 வயது முகப்புத்தக காதலன் உட்பட நால்வர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ்.பான்சிகடை உரிமையாளரும், அவரது நண்பரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் மட்டக்களப்பில் காதலனைப் பார்க்கச் சென்ற சிறுமி புதுக்குடியிருப்பிலும் 17 வயது சிறுவன் ஒருவனுடன் காதல்வயப்பட்டு அந்த சிறுவனால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அந்தச்சிறுவனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறுமிகளை துஷ்பிரோயகப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட ஏழுபேரில் மூவர் 17 வயது சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button