![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/8a66813b45b8eefb5e8382e1e56b9459_XL-1.jpg?resize=708%2C396&ssl=1)
யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கைதடி மேற்கைச் சேர்ந்த
சீ.ரவீந்திரன் (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கைதடி – கோப்பாய் வீதியில் கைதடி கலைவாணி வித்தியாலயத்துக்கு அருகில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – சைக்கிள் விபத்தில் சைக்கிளில் சென்ற குறித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார்.
அந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.