இலங்கைசெய்திகள்

செருப்புடன் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணியில் இருந்து இடைநிறுத்தம்

போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ஒருவர் செருப்பு அணிந்து கடமையில் ஈடுபட்டதால் பொலிஸ் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

போக்குவரத்துப் பணியில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்தவரை இரு பொலிஸார் மறித்துள்ளனர். அவர்களில் ஒருவர் செருப்பு அணிந்து கடமையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதனாலேயே பொலிஸ் உத்தியோகத்தர் கடமை நேரத்தில் உத்தியோகபூர்வ சீருடை அணியாததைக் காரணம் காட்டியே பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button