இலங்கைசெய்திகள்

இளைஞர் ஒருவரை வெள்ளைவானில் கடத்த முயற்சி – நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றச்சாட்டு

அம்பாறை கல்முனையில் வெள்ளைவானில் இளைஞர் ஒருவரைக் கடத்துவதற்கு முயற்சி மேற்க்கொள்ளப்பட்டதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் பிரிவு துணைச் செயலாளரான நிதான்ஷான் என்ற இளைஞரையே இனந்தெரியாத நபர்கள் கடத்திச் செல்ல முயற்சித்தனர் என சாணக்கியன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button