இலங்கைசெய்திகள்

யாழ்.மாவட்ட செயலகத்தில் சுகந்திரதின நிகழ்வு

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசதிணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் மாவட்ட செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இலங்கையின் 74வது சுதந்திரதின கொடியேற்றும் நிகழ்வு இன்று (04) காலை 08.19 மணிக்கு தேசியக்கொடியினை எற்றலுடன் இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு யாழ். மாவட்ட செயலகத்தின் எற்பாட்டில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் சுதந்திர தின தேசியக் கொடியேற்றும் நிகழ்வு மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

இதன் போது பசுமையினை நோக்கி என்னும் கருப்பொருளில் 74 ஆவது நிகழ்தரும் மரக்கன்றுகளும் பயன்மிக்க முக்கனி மரக்கன்றுகளும் இதன்போது அரசாங்க அதிபரினால் வழங்கிவைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக காணி அரசாங்க அதிபர் என்.முரளிதரன் உள்ளிட்ட உயர்அதிகாரிகள், மாவட்ட அலுவலகர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button