இலங்கைசமீபத்திய செய்திகள்

தேசிய பளுதூக்கல் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களை சுவீகரித்த சாவகச்சேரி இளைஞன்

தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி இடம்பெற்ற பளு தூக்கல் போட்டியில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் என்ற வீரர் மூன்று புதிய சாதனைகளை நிலை நாட்டியுள்ளார்.

25 மாவட்டங்களைச் சேர்ந்த 44க்கு மேற்பட்ட வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் பங்குபற்றிய யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்குபற்றி மூன்று போட்டிகளிலும் புதிய சாதனை படைத்து தங்க பதக்கங்களை சுவீகரித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button