இலங்கைசமீபத்திய செய்திகள்

துடுப்பாட்டத்தின் பிரமாண்டம் இறுதிப்போட்டி

அரியாலை கில்லாடிகள் 100 அணியினரால் நடத்தப்பட்ட துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று (07) பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 2.00 மணியளவில் அரியாலை சரஸ்வதி விளையாட்டு மைதானத்தில் என்.சுதேஸ்குமார் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இவ் இறுதிப் துடுப்பாட்ட போட்டிக்கு பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

மற்றும் இப்போட்டிக்கு விருந்தினர்களாக யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், நல்லூர் பிரதேசசபை தவிசாளர் என்.மயூரன், முன்னாள் வடமாகாண மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் உட்பட பலர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

யாழ்.மாவட்ட வீரர்களின் திறமைகளை ஊக்குவிக்க நடத்தப்பட்ட பிறீமியர் லீக் போட்டியின் இறுதி போட்டியை கண்டுகளிக்க அனைத்து கிரிக்கெட் ஆர்வலர்களையும் வருமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைத்து நிற்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button