இலங்கைசமீபத்திய செய்திகள்

தேசிய டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனம்

நாட்டில் அதிகரித்துவரும் டெங்கு நோய்பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில நாடளாவிய ரீதியில் இன்று (25) விசேட டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இவ்வருடத்தில் 43000 டெங்கு நோயாளர்கள் அடையாளம காணப்பட்டுள்ளதாகவும், இம்மாதத்தில் மாத்திரம் 8000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக டெங்கு அதிகரித்துச் செல்லுமாயின் நாடு பாரிய ஆபத்தை எதிர்நோக்கும் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button