இலங்கைசெய்திகள்

இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டார் கோட்டபாய

மக்கள் புரட்சியால் தலைமறவாகியுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 9 ஆம் திகதி மக்கள் புரட்சியால் தலைமறவாகி கப்பலில் இருந்த கோட்டபாய நேற்று முப்படைகளைச் சந்தித்துள்ளதாகவும், அதன் பின்னர் இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஜனாதிபதியின் பதவி விலகலை சபாநாயகர் உத்தியோக பூர்வமாக நாளை அறிவிப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button