இலங்கை
கொரோனத் தொற்றுக்குள்ளாகும் சிறுவர்கள்
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/202201161549412422_Tamil_News_Tamil-News-Release-of-revised-guidelines-for-corona-testing_SECVPF.jpg?resize=615%2C350&ssl=1)
கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை கொழும்பில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 40 சிறார்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்றுக்குள்ளான ஒரு குழந்தை மாத்திரம், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.