இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பதாகை தொடர்பில் இலங்கைத் தமிழரசு வாலிபர் முன்னணி கடும் கண்டனம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரசமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் புகைப்படத்துடன் புதிய நிதி அமைச்சருக்கு வாழ்த்துக்கள் என்ற வசனங்களுடன் காட்சி படுத்தப்பட்டிருந்த பதாகை தொடர்பில் இலங்கை தமிழரசுகட்சியின் வாலிபர் முன்னணி தமக்கு இவ்விடயம் தொடர்பில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அடியோடு மறுத்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் எமது செய்தி நிறுவனம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனோடு தொடர்பு கொண்டு வினவியபோது “அவர் இவ்விடயத்தை முற்றாக மறுப்பதாகவும் இவ்விடயம் தொடர்பிலான விளக்கத்துடன் கூடிய அறிக்கை வெளியிடப்படுமெனவும்” தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில், இலங்கை தமிழரசுகட்சி வாலிபர் முன்னணி தலைவர் செயோனிடம் வினவியபோது அவர் தெரிவித்தமை வருமாறு,

“இச்சம்பவம் தொடர்பில் நாம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளோம். இது எமது கட்சியின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு தமிழ் கட்சிகளாலேயே மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை மேற்கொண்டவர்களுக்கு எமது கண்டனங்களை தெரிவிப்பதுடன், இது குறித்து எமது மக்கள் குழப்பம் அடையத்தேவையில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button