இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

ஆயுதங்களுடன் வல்வெட்டித்துறை பகுதியில் 13 இளைஞர்கள் பொலீஸாரால் கைது

அபாயகரமான ஆயுதங்களுடன் வல்வெட்டித்துறை பகுதியில் 13 இளைஞர்களை வல்வெட்டித்துறை பொலீஸார் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் இச் சம்பவம் சற்று முன்னர் வல்வெட்டித்துறை பகுதியில்  இடம்பெற்றுள்ளது.வல்வெட்டித்துறை வல்வை மகளிர் கல்லூரிக்கு முன்பாகவுள்ள பொது இடத்தில் இளைஞர்கள் கூடியிருப்பதாக வல்வெட்டித்துறை பொலீஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற  வல்வெட்டித்துறை பொலீஸார்

அங்கு கூடியிருந்த இளைஞர்களை சோதனையிட்ட போது அவர்களிடமிருந்து  அபாயகரமான ஆயுதங்களான 4 வாள்கள் மற்றும் சையிக்கிள் செயின்கள் உட்பட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன்  சந்தேகத்தின் பெயரில் 13 இளைஞர்களை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button