இலங்கைசெய்திகள்

போலித் தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் ஜயந்த கெட்டகொட வலியுறுத்து

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திப் போலித் தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நாடாளுமன்றத்தில் இன்று (10) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் திரவப்பால் கோரி , நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேயாட்டம் ஆடினர் என பத்திரிகைகளிலும், இணைய ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறானதொரு சம்பவம் நடைபெறவில்லை.

இப்படியான சம்பவத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயருக்குக் களங்கம் ஏற்படுகின்றது. எனவே. இது தொடர்பில் விசாரணை நடத்தி, போலித் தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button