இலங்கைசெய்திகள்

கொக்குவிலில் புகையிரதம் மோதி இளம் யுவதி உயிரிழப்பு தந்தை படுகாயம்

கொக்குவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி 24 வயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (24) மதியம் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம் மோதியே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த யுவதி ஒருபக்க வீதியில் இருந்து மற்றைய பக்க வீதிக்கு, தண்டவாளத்தினூடாக கடந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரதம் வருவதை அவதானித்த தந்தை மகளை காப்பாற்ற முயற்சித்தவேளை அவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்தில் ராஜ்குமார் ஜெயந்தி என்ற யுவதி உயிரிழந்துள்ளதுடன் அவரது தந்தையான ராஜ்குமார் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button