இலங்கைசெய்திகள்

அடியவர்கள் தாகம் தீர்க்கும் தாகசாந்தி வழங்கும் நிகழ்வு

வரலாற்று பிரசித்திபெற்ற மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய பங்குனித்திங்கள் உற்சவ நிகழ்வு மிகச்சிறப்பாக இவ்வருடம் (2022) இடம்பெற்று வருகின்றது.

அவ்வகையில், பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்களுக்கு மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தினரால் வருடாவருடம் தாகசாந்தி நிகழ்வு மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இவ்வருடம் மூன்றாவது பங்குனித்திங்களில் தாகசாந்தி நிகழ்வு கடந்த வாரம் வளர்மதி சனசமூக நிலையத்தால் சிறப்பாக மேற்க்கொள்ளப்பட்டிருந்த நிலையில், நான்காவது பங்குனித் திங்கள் வாரமான நாளையும் (11) தாகசாந்தி நிகழ்வு இடம்பெறவுள்ளதாக வளர்மதி சனசமூக நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ் தாகசாந்தி நிகழ்விற்கு வளர்மதி சனசமூக நிலைய எல்லைக்குட்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு அங்கத்தவர்கள் நிதி அணுசரணை வழங்கிவருகின்றனர் எனவும் நிலையத்தினர் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button