இலங்கைசெய்திகள்

மாலைதீவில் இறந்த இலங்கை தேசிய அணி வீரரின் உடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

இலங்கை தேசிய அணியின் உதைபந்தாட்ட வீரரும், மன்னார் மாவட்டத்தின் பிரபல வீரருமான டக்சன் பியூஸ்லஸ் கடந்த 26 ஆம் திகதி மாலைதீவில் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரது சடலம் இன்று அதிகாலை கட்டுநாயக்கா விமானநிலையம் ஊடாக கொழும்பை வந்தடைந்துள்ளது. அவரது சடலம் தற்போது உடற்கூற்று பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் சடலம் கையளிக்கப்படும். மக்களின் அஞ்சலிக்காக யாழ்ப்பாணம் எடுத்துச்செல்லப்படும்.

அதன்பின்னர், 5ஆம் திகதி பூநகரி, முழங்காவில், தேவன்பிட்டி ஆகிய இடங்களில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மன்னாரிலுள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும்.

எதிர்வரும் திங்கட்கிழமை மாலை மன்னார் பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button