செய்திகள்விளையாட்டு

இந்தியாவிற்கு எதிரான தொடரில் வனிந்து இணைத்துக் கொள்ளப்படவில்லை

இந்தியாவிற்கு எதிரான ரி 20 தொடரில் இலஙகை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க கொரோனாத் தொற்றுக் காரணமாக அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

இந்தியாவிற்கு எதிரான முதலாவது போட்டி நாளை (24) லக்னோவில் இடம்பெறவுள்ளது.

அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற தொடரில் பங்கேற்றிருந்த வனிந்து ஹசரங்கவிற்கு மேற்க்கொள்ளப்பட்ட பிசீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், அவுஸ்ரேலிய அணியுடனான எஞ்சிய மூன்று போட்டிகளிலும் நீக்கப்பட்டு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.

7 நாட்கள் தனிமைப்படுத்தல நிறைவடைந்த பின்னர் அவருக்கு மேற்க்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மீண்டும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்தும் அவர் அவுஸ்ரேலியாவில் இருக்க வேண்டியதன் காரணமாக இந்தியாவிற்கு எதிரான தொடரில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

Related Articles

Leave a Reply

Back to top button