இலங்கைசெய்திகள்

மன்னாரில் கடலில் தவறி வீழ்ந்து மீனவர் உயிரிழப்பு

மன்னார் கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் சடலம் இன்று (14) மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மன்னார் செளத்பார் பகுதியில் மீன்பிடிப்பதற்கு வலைவீசியபோது தவறுதலாக பாலத்திற்கு அருகில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்து காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன்னார் எழில் நகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான 29 வயதுடைய கிறிஸ்தோப்பர் ஜாக்லின் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button