![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/Screenshot_20220420_133838.jpg?resize=708%2C412&ssl=1)
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் சுற்றாடல் துறை அமைச்சராகப் பதவியேற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டமையைக் கண்டித்தே அவருடைய சொந்த ஊரான ஏறாவூரில் அவருடைய புகைப்படத்திற்கு காசு மாலை அணிவிக்கப்பட்டு, ஒருபெட்டியின் மேல் அது வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வீதியில் வைத்து மக்களால் எரிக்கப்பட்டது.