இலங்கைசெய்திகள்

கரவெட்டியில் பட்டப்பகலில் பத்துப்பவுண் நகை திருட்டு

யாழ்ப்பாணம் கரவெட்டிப்பகுதியில் உள்ள வீடொன்றில் பட்டப்பகலில் 10 பவுண் நகை களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கரவெட்டி கிழவி தோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றில்  இன்று (11) மதியம் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்தவர்கள் கோவிலுக்கு சென்றுள்ள நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் ஓடு பிரித்தே இவ்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button