இலங்கைசெய்திகள்

இராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர்கள் இதுவரை அரச உடைமைகளை கையளிக்கவில்லை – திறேசேரி தகவல்

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பதவியிலிருந்து இராஜினாமா செய்தவர்களிடம் உள்ள அரச சொத்துக்களை உடன் மீளப்பெற்றுக் கொள்ளுமாறு அமைச்சர்களின் செயலாளர்களுக்கு திறைசேரி அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டங்களால் கடந்த வாரத்திற்கு முன்னர் அமைச்சரவை கூண்டோடு இராஜினாமா செயதிருந்தனர். இந்நிலையில், பதவி இராஜினாமா செய்தும் முன்னாள் அமைச்சர்கள் அரச சொத்துக்களை இதுவரை கையளிக்கவில்லை.

இந்நிலையிலேயே, மேற்குறித்த அறிவித்தலை திறைசேரி விடுத்துள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button